Monday, 15 August 2016

பெற்றது இரவென்பதால் 
விடியவே இல்லை இன்றும் ! 
கற்றது நற்பாடமொன்று 
பெறாமல் இருப்பின் நல்லதென்று ! 

போராடினர் பலவிதத்தில் 
வாதாடினர் விடுதலைப் பெற்றிட ! 
மாண்டனர் பல்லாயிரம் 
மகிழ்ந்தனர் பலகோடி பெற்றதும் ! 

வருத்தமுடன் கூறினாலும் 
பொருத்தமே என்று புரிந்திடுவீர் ! 
நல்லவை நடப்பதைவிட 
அல்லவை அதிகமென அறிந்திடுவீர் ! 

எதிர்மறை கவிதையல்ல 
நிகழ்கால நிகழ்வுகளின் பாதிப்பே ! 
நடைமுறை மாறினால்தான் 
இறுதிவரை இன்பமுடன் வாழலாம் ! 

பாடுபட்ட தியாகிகளை வணங்குவோம் 
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம !

0 comments:

Post a Comment

Sample Text

Blog Archive

Powered by Blogger.

Popular Posts

Text Widget