ஆங்கில ப்ளாக் வைத்திருக்கும் நமது மேலை/அமெரிக்க நாட்டு நண்பர்கள் பெரும்பாலானோர் $$ராக சம்பாதிக்கும் போது நமது தமிழ் வலைபதிவர்கள் இதில் சற்று பின் தங்கியே இருக்கின்றனர். ஆதலால் எனக்குத் தெரிந்த இணையம் (website) அல்லது பிளாக் (blog) மூலம் சம்பாதிக்கும் வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூற்றுக்கணக்கான ad-networks இருந்தாலும், நான் உபயோகப்படுத்தியதும், நம்பகத்தன்மை உள்ளதுமான சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. கூகுள் ஆட்சென்ஸ்
கூகுளின் இந்த சேவை பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். தற்போழுது நீங்கள் இதை உங்கள் தமிழ் பதிவிலும் இணைக்கலாம். இதற்கான வழிமுறைகள்:
அ. முதலில் இங்கேSign up for AdSense. Sign up for AdSense. சுட்டி ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்யவும்.
ஆ. பின்னர் Adsense setup > Refferals கிளிக் செய்து தேவையான code’i பெற்றுக் கொள்ளவும்.
இ. இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த code’i உங்கள் பிளாகில் இணைப்பதுதான்.
இப்பொழுது நீங்கள் சேர்த்த கோடிற்கேற்ப கூகுள் தன் விளம்பரங்களை உங்கள் பதிவில் வெளியிடும். இனி என்ன, ஒவ்வொரு கிளிக்கும் உங்களுக்கு $$தான்.
Sign up for AdSense.Sign up for AdSense. இங்கே கிளிக்கி கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிரியேட் செய்யவும்.
2. டெக்ஸ்ட் லிங்க் ஆட்ஸ்
என்னுடைய சில இணையதளங்களை இதன் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளேன். மிக அருமையான user friendly இணையம். இதன் மூலம் உங்கள் பிளாக்/இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரர்களின் லிங்குகளை உங்கள் பிளாக்/இணையத்தில் display செய்யலாம். ஒவ்வொரு லிங்கிற்கான விலையையும் Alexa மற்றும் Google Pagerank மூலம் அவர்களே நிர்ணயம் செய்கின்றனர். Don’t miss it!
அக்கவுண்ட் தொடங்க இங்கே கிளிக்கவும்!
3. ஆட்ஸ் பார் இந்தியன்ஸ்
எங்களுக்கு இந்திய விளம்பரங்கள் தான் வேண்டும் என்பவர்களுக்கு இந்த நிறுவனம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. சிறப்பான அல்லது user friendly தள வடிவமைப்பு இல்லாதது இதன் மிகப்பெரிய குறைபாடு. ஆனால் ஒவ்வொரு கிளிக்கிற்கும் கூகிள் ஆட்சென்ஸிற்கு இணையான வருமானம் ஈட்டித்தருகிறது.
உங்கள் அக்கவுண்டை இங்கே கிளிக்கி தொடங்கவும்.
4. இணையம் இல்லாதவர்களும் சம்பாதிக்கலாம்
நீங்கள் browse செய்யும் நேரத்தையும் காசாக மாற்றவேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அக்லோகோ நிறுவனத்தின் view bar ஐ டவுன்லோட் செய்து உங்கள் browser இல் நிறுவிக்கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் browse செய்யும் நேரத்தையும் நீங்கள் பரிந்துரை செய்த நண்பர்கள் செய்யும் நேரமும் கணக்கிடப்பட்டு உங்கள் தொகை நிர்ணயம் செய்யப்படும். நான் அறிந்ததிலேயே மிக எளிமையானது இதுதான்.
உங்கள் அக்கவுண்டை இங்கே கிளிக்கி தொடங்கவும்.
# பிளாக் / இணையம் மூலம் சம்பாதிக்கும் வழிகள்
# தொலைவழிக் கல்வியில் படிக்கிறீர்களா? உஷார்!!: மக்கள் சட்டம்
முழுநேரக்கல்வியில் படிப்பதற்கு தேவையான வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் கல்வியை தொடருவதற்கு அஞ்சல் வழிக்கல்வி என்ற முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்த முறையில் படித்து முன்னேறியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் இணையம் மூலமாகவும் இந்த கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் தொலைவழிக்கல்வியை வழங்காத பல்கலைக்கழகமே இல்லை எனலாம்.
மக்களுக்கு கல்விச்சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முறை, தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களின் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த பல்கலைக்கழகங்களில் அரசுத்துறை பல்கலைக்கழகங்ளும் அடங்கி விடுகின்றன.
இவ்வாறு தொலைதூர கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக தொலைக்கல்வி குழு (DISTANCE EDUCATION COUNCIL) அமைக்கப்பட்டது.
தொலைநிலைக்கல்வியை தரமுள்ளதாக்கும் இந்த திட்டத்தின்கீழ் கல்வித்திட்டங்களுக்கான தரநிர்ணயம் செய்யப்பட்டது. உதாரணமாக தொலைநிலைக்கல்வி மையத்தில் இருக்க வேண்டிய பேராசிரியர்களின் எண்ணிக்கை முதலானவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வணிக மேலாண்மை(MBA), கணிப்பொறியியல் (MCA) போன்றவற்றில் மேல்நிலை பட்ட வகுப்புகளை மூன்றாண்டுகள் நடத்த வேண்டும் என்றும் அவற்றில் இடை நிலைத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற திட்டங்களும் வலியுறுத்தப்பட்டன.
ஆனால் எந்த நல்லத்திட்டங்களையும் போல, இந்த திட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் என்ன முடிவு என்பதற்கு எந்த விவரமும் இல்லை.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், தொலைவழிக்கல்வி வழங்குவதற்குமுன், இந்த தொலைக்கல்வி குழுவிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களை எச்சரிக்கும் விதமாக பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
எனினும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த தொலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், சேலம் வினாயகா மிஷன் பல்கலைக்கழகமும் மட்டுமே அவற்றின் அனைத்து தொலைக்கல்வி படிப்புகளுக்கும் இந்தக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியத்துறை (B. Ed) பட்டப்படிப்புக்கு மட்டும் தொலைநிலைக்கல்வி குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் பட்டங்களை கூவிக்கூவி விற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை.
இப்போதைய நிலையில் இந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பட்டயங்கள் பட்டங்கள் செல்லுமா? செல்லும் என்றால் தொலைநிலை கல்விக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு என்ன அர்த்தம்? அந்தப்பட்டங்கள் செல்லாது என்றால் பல்கலைககழகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவும், அரசும் என்ன செய்யப்போகின்றன?
-மக்கள் சட்டம் குழு
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://makkal-sattam.blogspot.com/2007/08/blog-post_27.html
# "விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்"
1. கியுபா
பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு.பிடரல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்திய நாடு. அமெரிக்காவின் சிஐஏ (CIA) சுமார் 638 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றது சரித்திரம். இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து
இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல்,இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று
[Photo] தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. விவசாயத்தில் பழமையும் புதுமையும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டுறவின் வயது சுமார் 48 ஆண்டுகள்.
2. இஸ்ரேல் 1948 ஆண்டு தோன்றிய நாடு. தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டை
நாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு. இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் "டுலிப்" (Tulip)மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நாடு . சொட்டு நீர் பாசனம்,பசுமை கூடம், மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும்[Photo] தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),மோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள். கிப்புட்ஸ் முறைக்கு வயது சுமார் 90 ஆண்டுகள். (நாடு தோன்றியதிற்கும் கிப்புட்ஸ் முறைக்கும் ஆண்டுகளில் வித்தியாசம் உண்டு.)
விஷயத்திற்கு வருவோம் உற்பத்தி மற்றும் சந்தை இரு நாடுகளிலும் கூட்டுறவு முறையில் நடைபெறுவது அவர்களின் வெற்றி. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி கொண்ட சுரண்டல்கள் அங்கு இல்லை. நம் நாட்டில் கூட்டுறவு என்பது சமுதாய பிரபலங்களின் கையிலிருப்பதால்
சாதனைகள் இல்லை. அதையும் மீறி வந்து சாதனை செய்தது " அமுல்". ஆனால் அந்த கூட்டுறவு சாதனைக்கு காரணமான திரு.குரியன் சென்ற ஆண்டு நீக்கப்பட்டார். சாதனை தொடருமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டுறவிற்கு பெயர் பெற்ற கோவையின் " சிந்தாமணி கூட்டுறவு அங்காடி" இன்று இல்லை என்பது வரலாறு.
உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றத்தால் வரும் 10-20 ஆண்டுகளில் சிறு,குறு விவசாயம் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஒப்பந்த முறை அல்லது கம்பெனி விவசாயம் தான் இருக்கும் என்கிறார்கள் சமுதாய பிரபலங்கள். ஆனால் கூட்டுறவு முறை அதனை முறியடிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட வரலாற்று
உண்மை. அதற்கு லாப வெறியற்ற சமுதாய வளர்ச்சிக்கு உடன்படும்
மனங்களும், அதையும் மீறினால் தண்டிக்க கடுமையான சட்டமும் தேவை.
கூட்டுறவே நாட்டுயர்வு.
# வங்கிகளின் பேராசை
கடந்த இரண்டு வாரங்களாக அடி மேல் அடி வாங்கிய பங்கு சந்தைகளை பார்த்த அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பென் பெர்னாங்க் வெறுத்துப் போய் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியை (discount rate) 0.5% குறைத்து விட்டார்.
வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான Countrywide திவாலாக போகிறது என்று வதந்தி பரவி, கலிபோர்னியாவில் அந்த வங்கிகளின் கிளைகளில் பெரிய க்யூவில் மக்கள் நின்றார்கள் – தங்கள் பணத்தை இப்போதே எடுக்காவிட்டால், இனிமேல் எப்போதுமே கிடைக்காது என்ற பயத்தில்.
ஆடி தள்ளுபடிக்காக தி.நகரில் தென்படும் அளவிற்கு கூட்டம் இந்த வங்கியின் கிளைகளில் அலை மோதியது.
Subprime என்பதே “வழக்கமாக வழங்கப்படும் கடனை விட ஒரு படி கீழே” என்று தான் அர்த்தம். இருந்தாலும், அமெரிக்க ரியல் எஸ்டேட் boom இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு, Countrywide போன்ற வங்கிகள் பல பில்லியன் டாலர்களை இழந்து விட்டன.
அமெரிக்காவில் கிரடிட் ரேட்டிங் முறை இருப்பதால், வாடிக்கையாளர்களில் யார் prime, யார் subprime என்று ஓரளவுக்காவது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட கிரடிட் ரேட்டிங் முறை இல்லை.
இருந்தாலும், இந்தியாவில் பல வங்கிகளும் NBFC லோன் நிறுவனங்களும் லோன்களை அள்ளிக் கொடுக்கின்றன. வீடு விலைகள் கிடுகிடுவென்று உயர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடன்களை அள்ளி வழங்குகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் வீட்டு விலை 20% குறைந்திருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் கீழே விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் போது, தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்ப வராமல் போனால் இந்திய வங்கிகள் எப்படி சமாளிக்கும்?
அமெரிக்காவில் subprime-ல் கடன் வாங்கிய சில வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு சாவியை வங்கிகளிடம் கொடுத்து விட்டு ஊரை காலி செய்கிறார்கள். தாங்கள் வாங்கிய விலையை விட வீட்டின் மதிப்பு பல மடங்கு குறைந்து விட்டதால், foreclosure செய்வதை கூட வித்தியாசமாக இப்படி செய்கிறார்கள்!
உலக சந்தைகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மட்டும் வித்தியாசமானது என்று பலர் என்னிடம் கூறினர். அமெரிக்காவில் நடப்பது போல இங்கே நடக்காது என்று விவாதம் செய்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.
எல்லாவற்றையும் தீர்மானிப்பது “Law of supply and demand”. இந்தியாவாக இருந்தாலும் சரி, இலங்கையாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. அதனால் இந்தியாவில் மட்டும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும் என்ற விவாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுத்த வங்கிகளுக்கு, சில ஆயிரம் கோடிகள் திரும்ப வராமல் போனாலே அது மிக பெரிய பிரச்னை.
இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்துமே கடன்களை கொடுப்பதில் தாராள மனதுடன் இருக்கின்றன. பெரும்பாலான வங்கிகளில் திறமை பெற்ற கிரடிட் அனலிஸ்ட்டுகள் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி, பல வங்கிகள் 90% லோன் கொடுக்கின்றன. கேட்பவர்களுக்கெல்லாம் கிரடிட் கார்டுகளை கொடுக்கின்றனர்.
ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து தன் கடன் தொகையை விட வீட்டின் மதிப்பு குறைந்து விட்டால், பலர் கடனை அடைக்கப் போவதில்லை. அப்போது இந்திய வங்கிகள் பலவற்றுக்கு Countrywide வங்கியின் தற்போதைய நிலைமை வரலாம்.
வளர்ந்த நாடுகளில் இருப்பது போல “Credit derivatives” முறை நம் நாட்டில் இல்லை. விரைவில் இந்த முறையை அமுல்படுத்த போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் RBI வங்கி ஒரு draft-ஐ வெளியிட்டது. இதே போல ஒரு draft மூன்று வருடங்களுக்கு முன்னாலும் வெளியிடப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
Credit derivatives பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப் போனால், கடன் நஷ்டத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வங்கிகளுக்கு இது உதவும். தற்போதைய இந்திய சூழ்நிலைக்கு இது மிக அவசியம். நாம் பங்குகள் வாங்கினால் அதை “Put” ஆப்ஷன்கள் மூலம் பாதுகாப்பது போல வங்கிகளுக்கு credit derivatives ஹெட்ஜாக இருக்கும்.
நீங்கள் இந்திய வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இந்திய ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். வங்கிகளின் பங்குகள் சரிவதற்கு முன் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
Article:
http://tamilnithi.blogspot.com/2007/08/blog-post_20.html
# பங்குசந்தையை வீழ்த்திய விவகாரங்கள்!:
கடந்த ஜூன் இரண்டாம் வார துவக்கத்டிலிருந்து வெளிவரத்துவங்கிய நிறுவணங்களீன் முதல் காலாண்டு (Qyt Result) அறிக்கைகள் தந்த நம்பிக்கை,மற்றும் சர்வதேச சந்தைகளில் கானப்பட்ட
உற்சாகம்,காரணமாக 14000 ம் புள்ளிகளிலிருந்த சந்தை விறு விறு எண உயரத்துவங்கி வெகு சுலபமாக 15000 த்தை கடந்து ஆச்சரியம் அளித்தது.அதைவிட ஆச்சரியம் அடுத்த்த சில நாட்களிலேயே 15868.80 என்ற புள்ளிகளை அடைந்தபோது சந்தை ஆய்வாளர்கள் கூட ஆச்சரியபட்டு போணார்கள்.
மீடியாக்களும்,வல்லுணர்களும் சந்தை 16000 த்தை தாண்டும் ,20000 த்தை தொடும் என ஆரூடம் கூறிணார்கள்.
ஆணால் இதே காலகட்டத்தில் கச்சாஎண்ணெய் விலை உயர்வு,பணவீக்கம் அதிகரிப்பு என Negative காரணிகளும் வலுப்பெற்றதை கணக்கில் கொள்ளவில்லை பங்குசந்தை.
(ஆணால் நாம் கடந்த ஜூலை 20ம் தேதி பதிப்பில் "சந்தை நிலவரம்-எச்சரிக்கை அவசியம்" என்ற தலைப்பில்
சந்தை Overbought zone ல் இருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் எண்ணெண்ன பாதகசெய்திகள் சந்தையை சீர்குலைக்கும் என பதிப்பித்திருந்தோம்).
ஆகவே சந்தை தணது உச்சபட்ச புள்ளிகளை தொட்டபோது ஏறத்தாழ முண்ணனி நிறுவணங்கள்
அனைத்தும் தனது முதல் காலாண்டு அறிக்கைகளை வெளியிட்டு முடித்திருந்தன.மேற்கொண்டு சந்தையினை ஊக்குவிக்கும் செய்திகள் இல்லை.
இந்த 14000 to 15850 எழுச்சி வழுவாக (Broad based) இல்லாமல் சில துறை சார்ந்ததாக மட்டுமே இருந்தது.IT,AUTO,FMCG,OIL&Gas நிறுவன பங்குகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.Bank,Capital goods,Metal,நிறுவண பங்குகளே உயர்விற்கு பெறும் காரணமாயிருந்தது.
அத்தோடு சந்தையில் கடந்த ஒருவருடத்திற்கு முன் முதலீடு செய்த அனைவருமே பெரும்பாலும் நல்ல லாபவிகிதத்தை அடைந்திருந்தது Profit booking க்கிற்கு வழி வகுத்தது.
இதுபோண்ற காரணங்களை ஆராய்ந்தே நாம் கடந்த ஜுலை 20 பதிப்பிலிருந்தே எச்சரிக்கை அவசியம்,புதிய முதலீட்டை தவிருங்கள்,சந்தை உயர்வினை பயன்படுத்தி கையில் உள்ள பங்குகளை விற்று காசாக்குங்கள் என தொடர்ந்து திணமும் வலியுருத்தி வந்தோம்.(பார்க்க AArchive பகுதியில் முந்தைய பதிவுகளை)
இந்த நிலையில் சந்தையை சீர்குலைத்த முக்கிய செய்திகள் வரிசைகட்டி வரத்துவங்கியது.அவற்றில் சந்தை நிலவரத்தையே மாற்றி அமைத்த் முக்கிய செய்திகள்
1.சிமெண்ட் நிறுவணங்களுக்கு MMTC விலை விவகாரம் தொடர்பாக அணுப்பிய நோட்டீஸ்
சிமெண்ட் நிறுவன பங்குகளில் சரிவை ஏற்படுத்தியது.
2.ரூபாய் மதிப்பு மேலும் வழுபெற்றது IT நிறுவன பங்குகளை தொடர்ந்து வீழ்ச்சி காணவைத்தது.
3.RBI காலாண்டு கூட்டத்தில் பண வீக்கத்தை கட்டுபடுத்தும் நோக்கோடு அறிவிக்கபட்ட
CRR விகித உயர்வும்,மற்றும் வங்கிவைப்பு தொகை அதிகரிப்பு பணபுழக்கத்தை
கட்டுபடுத்தியதால் சந்தை நீர்மைதண்மை குறைந்தது.
4.அமெரிக்க சந்தையில் வெடித்து கிளம்பிய SUBPRIME Martgage பிரச்சினை சர்வதேச சந்தையை
சரிவுக்குள்ளாக்கியது.இது இந்திய சந்தை வீழ்ச்சியை மேலும் துரிதபடுத்தியது.
5.அமெரிக்காவுடனான அனுசக்தி ஒப்பந்தம் மத்திய அரசுக்கு அதன் ஆதரவு கட்சிகளிடமிருந்தே
கிளம்பிய எதிர்ப்பு அரசு நிலைதண்மைகுறித்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இதுதான் Sensex 15850 லிருந்து 13800 வரை டைவ் அடித்ததண் பிண்ணனி.பாதக செய்திகள் சந்தை அபார எழுச்சியிலிருக்கும்போதுதாண் வந்து சேரும்.அப்போது சந்தை Normal Trading Zone ல் இருந்தால் வீழ்ச்சி மிதமாக இருக்கும்.அதுவே Overbought Zone ல் இருந்தால் அடி பலமாக இருக்கும்.எனவேதாண் சந்தை Overbought zone ஐ தொடும்போதெல்லாம் எச்சரிக்கை அவசியம் என்பதனை வலியுறுத்துகிறோம்.
சரி இந்த வீழ்ச்சி தொடருமா? அல்லது மீண்டும் எழுச்சிபெறுமா? புதிய முதலீடுகளை மேற்கொள்ள இது சிறந்த தருனமா? எந்த துறை பங்குகளை வாங்குவது? அல்லது மொத்ததில்
சந்தையை விட்டு விலகி இருப்பது உசிதமா என உங்களுள் பல கேள்விகள் எழலாம்.
நண்றி.
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://kaasumalai.blogspot.com/2007/08/blog-post_18.html
# இயற்கை கொசு விரட்டிகள்!
இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரணம் கிடைத்தாலும் . அதன் பின் விளைவுகளை யாரும் அறியவில்லை. கொசுவர்த்தியில் மறைந்து இருக்கும் பயங்கரம். என்ன?
கொசுவர்த்திகளில் கொசு விரட்டும் காரணிகளாக செயல்படும் வேதிப்பொருட்கள் என்ன ,
*சிந்தெடிக் D அல்லித்ரின்
*ஆக்டோ குளோரோ - டை- ப்ரோபைல் ஈதர் அல்லது s-2
இவை எரியும் போது ஏற்படும் வேதி வினையால் உருவாகி வெளியிடும் வேதிப்பொருள் பை - குளோரோ மெதைல் ஈதர்
இந்த வேதிப்பொருட்களை தொடர்ந்து மூடிய அறையில் இரவு முழுவதும் சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து ,மேற்கொண்ட வேதிப்பொருட்களை கொசுவர்த்தியில் பயன்படுத்த தடை விதிக்க செய்துள்ளார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில்.
ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!
இந்த வேதிப்பொருட்கள் ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கிறது என்றால் , கொசுவர்த்தி சுருளின் அளவுக்கு ஏற்ப ஒரே ஒரு கொசுவர்த்தீ எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் என்பது கீழே கொட்டும் சாம்பல் அல்ல நுண்ணிய காற்றில் மிதக்கும் சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய் and cancer போல நோய்கள் வரலாம்.
மேலும் கொசு வர்த்தி எரிவதனால் ஃபார்மல் டி ஹைட் என்ற வேதிப்பொருளும் பக்க விளைபொருளாக வரும்.
கொசுவை விரட்ட என்று காசு கொடுத்து கொசு வர்த்தி வாங்க போய் என்னவேல்லாம் இலவசமாக கிடைக்கிறது பாருங்கள்.
அப்படி என்றால் கொசுவிடம் இருந்து தப்பிக்க என்ன தான் வழி.
1)கொசு உற்பத்தி ஆகும் இடங்களிலே அழிப்பது,
2)கொசு உருவாகாமல் சுத்தமாக சுற்று புறத்தினை வைத்துக்கொள்வது.
3)கொசு வலை பயன்படுத்துவது.
செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.
பல மிக எளிமையான தீங்கற்றவை.
ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):
பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.
கொசு விளக்கு பொறி!
இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!
பெரோமொன் கொசு பொறி!
கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.
கொசுவின் இயற்கை எதிரிகள்:
உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.
அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்
நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.
உயிரி்யல் கொல்லி!
பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.
தாவரவியல் கொசு விரட்டி!
சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.
கொசு விழுங்கும் தாவரம்:
அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.
கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,
கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!
Article:
http://vovalpaarvai.blogspot.com/2007/08/blog-post_17.html
# உயிரை பறிக்கும் செல்போன்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன்பஅழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும்.குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் ஸ்பிரிங் போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும்.
அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு ரிங்டோன் தான்!இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல் போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள்.ஒரு புறம் வேடிக்கை யாகவும் இருக்கிறது. காதில் ëஹெட்போனை வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம்புடிச்சு அலையுது என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்ததுசிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.
1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல மோட்டோரல்லா கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப் படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக் காவின் நிï ஜெர்சியை அடுத்து முர்ரேஹில் பகுதியில் உள்ள பெல் லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள்.
இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள்.இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன.செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது
மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை மோட்டோரல்லா கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது நோக்கியா நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டிய

