கடந்த ஜூன் இரண்டாம் வார துவக்கத்டிலிருந்து வெளிவரத்துவங்கிய நிறுவணங்களீன் முதல் காலாண்டு (Qyt Result) அறிக்கைகள் தந்த நம்பிக்கை,மற்றும் சர்வதேச சந்தைகளில் கானப்பட்ட
உற்சாகம்,காரணமாக 14000 ம் புள்ளிகளிலிருந்த சந்தை விறு விறு எண உயரத்துவங்கி வெகு சுலபமாக 15000 த்தை கடந்து ஆச்சரியம் அளித்தது.அதைவிட ஆச்சரியம் அடுத்த்த சில நாட்களிலேயே 15868.80 என்ற புள்ளிகளை அடைந்தபோது சந்தை ஆய்வாளர்கள் கூட ஆச்சரியபட்டு போணார்கள்.
மீடியாக்களும்,வல்லுணர்களும் சந்தை 16000 த்தை தாண்டும் ,20000 த்தை தொடும் என ஆரூடம் கூறிணார்கள்.
ஆணால் இதே காலகட்டத்தில் கச்சாஎண்ணெய் விலை உயர்வு,பணவீக்கம் அதிகரிப்பு என Negative காரணிகளும் வலுப்பெற்றதை கணக்கில் கொள்ளவில்லை பங்குசந்தை.
(ஆணால் நாம் கடந்த ஜூலை 20ம் தேதி பதிப்பில் "சந்தை நிலவரம்-எச்சரிக்கை அவசியம்" என்ற தலைப்பில்
சந்தை Overbought zone ல் இருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் எண்ணெண்ன பாதகசெய்திகள் சந்தையை சீர்குலைக்கும் என பதிப்பித்திருந்தோம்).
ஆகவே சந்தை தணது உச்சபட்ச புள்ளிகளை தொட்டபோது ஏறத்தாழ முண்ணனி நிறுவணங்கள்
அனைத்தும் தனது முதல் காலாண்டு அறிக்கைகளை வெளியிட்டு முடித்திருந்தன.மேற்கொண்டு சந்தையினை ஊக்குவிக்கும் செய்திகள் இல்லை.
இந்த 14000 to 15850 எழுச்சி வழுவாக (Broad based) இல்லாமல் சில துறை சார்ந்ததாக மட்டுமே இருந்தது.IT,AUTO,FMCG,OIL&Gas நிறுவன பங்குகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.Bank,Capital goods,Metal,நிறுவண பங்குகளே உயர்விற்கு பெறும் காரணமாயிருந்தது.
அத்தோடு சந்தையில் கடந்த ஒருவருடத்திற்கு முன் முதலீடு செய்த அனைவருமே பெரும்பாலும் நல்ல லாபவிகிதத்தை அடைந்திருந்தது Profit booking க்கிற்கு வழி வகுத்தது.
இதுபோண்ற காரணங்களை ஆராய்ந்தே நாம் கடந்த ஜுலை 20 பதிப்பிலிருந்தே எச்சரிக்கை அவசியம்,புதிய முதலீட்டை தவிருங்கள்,சந்தை உயர்வினை பயன்படுத்தி கையில் உள்ள பங்குகளை விற்று காசாக்குங்கள் என தொடர்ந்து திணமும் வலியுருத்தி வந்தோம்.(பார்க்க AArchive பகுதியில் முந்தைய பதிவுகளை)
இந்த நிலையில் சந்தையை சீர்குலைத்த முக்கிய செய்திகள் வரிசைகட்டி வரத்துவங்கியது.அவற்றில் சந்தை நிலவரத்தையே மாற்றி அமைத்த் முக்கிய செய்திகள்
1.சிமெண்ட் நிறுவணங்களுக்கு MMTC விலை விவகாரம் தொடர்பாக அணுப்பிய நோட்டீஸ்
சிமெண்ட் நிறுவன பங்குகளில் சரிவை ஏற்படுத்தியது.
2.ரூபாய் மதிப்பு மேலும் வழுபெற்றது IT நிறுவன பங்குகளை தொடர்ந்து வீழ்ச்சி காணவைத்தது.
3.RBI காலாண்டு கூட்டத்தில் பண வீக்கத்தை கட்டுபடுத்தும் நோக்கோடு அறிவிக்கபட்ட
CRR விகித உயர்வும்,மற்றும் வங்கிவைப்பு தொகை அதிகரிப்பு பணபுழக்கத்தை
கட்டுபடுத்தியதால் சந்தை நீர்மைதண்மை குறைந்தது.
4.அமெரிக்க சந்தையில் வெடித்து கிளம்பிய SUBPRIME Martgage பிரச்சினை சர்வதேச சந்தையை
சரிவுக்குள்ளாக்கியது.இது இந்திய சந்தை வீழ்ச்சியை மேலும் துரிதபடுத்தியது.
5.அமெரிக்காவுடனான அனுசக்தி ஒப்பந்தம் மத்திய அரசுக்கு அதன் ஆதரவு கட்சிகளிடமிருந்தே
கிளம்பிய எதிர்ப்பு அரசு நிலைதண்மைகுறித்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இதுதான் Sensex 15850 லிருந்து 13800 வரை டைவ் அடித்ததண் பிண்ணனி.பாதக செய்திகள் சந்தை அபார எழுச்சியிலிருக்கும்போதுதாண் வந்து சேரும்.அப்போது சந்தை Normal Trading Zone ல் இருந்தால் வீழ்ச்சி மிதமாக இருக்கும்.அதுவே Overbought Zone ல் இருந்தால் அடி பலமாக இருக்கும்.எனவேதாண் சந்தை Overbought zone ஐ தொடும்போதெல்லாம் எச்சரிக்கை அவசியம் என்பதனை வலியுறுத்துகிறோம்.
சரி இந்த வீழ்ச்சி தொடருமா? அல்லது மீண்டும் எழுச்சிபெறுமா? புதிய முதலீடுகளை மேற்கொள்ள இது சிறந்த தருனமா? எந்த துறை பங்குகளை வாங்குவது? அல்லது மொத்ததில்
சந்தையை விட்டு விலகி இருப்பது உசிதமா என உங்களுள் பல கேள்விகள் எழலாம்.
நண்றி.
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://kaasumalai.blogspot.com/2007/08/blog-post_18.html
# பங்குசந்தையை வீழ்த்திய விவகாரங்கள்!:
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment